என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோபி பகுதியில் சைக்கிளில் விற்பனை - 13 டீ கேன்கள் பறிமுதல்

    ஈரோடு மாவட்டத்தில் விதிமுறைகள் மீறி கடைகள் செயல்படுகிறதா? பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுகிறார்களா? என போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள்.

    கோபி:

    ஈரோடு மாவட்டத்தில் விதிமுறைகள் மீறி கடைகள் செயல்படுகிறதா? பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுகிறார்களா? என போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள்.

    இதேபோல் கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் சோம சுந்திரம், சப்- இன்ஸ்பெக்டர் வசந்த குமார் மற்றும் போலீசார் நகரின் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

    போலீசார் கோபி அரசு ஆஸ்பத்திரி பகுதி, பஸ் நிலையம், மார்க்கெட், பாரியூர் ரோடு, நஞ்ச கவுண்டன்பாளையம் பிரிவு உள்பட பல பகுதிகளில் ரோந்து வந்தனர். அப்போது அந்த பகுதிகளில் சிலர் சைக்கிளில் கேன்களில் டீ வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

    அங்கு மக்கள் கூட்டமாக நின்று கொண்டு டீ குடித்தனர்.இதையடுத்து சைக்கிளில் கேன் வைத்து டீ விற்பனை செய்தவர்களை பிடித்து விசாரணை நடத்தி அறிவுரை கூறினர். மேலும் அவர்களிடம் இருந்து 13 டீ கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்ற கூடாது. சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் டீ விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர். 

    Next Story
    ×