என் மலர்
செய்திகள்

விக்னேஷ்
திருக்கடையூர் அருகே, குடும்ப பிரச்சினையால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
திருக்கடையூர் அருகே குடும்ப பிரச்சினையால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருக்கடையூர்:
மயிலாடுதுறை மாவட்டம் மடப்புரம் மாஞ்சோலை தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 21). விவசாயியான இவரது மனைவி அபிதா (20). இவர்கள், 7 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். அபிதா கர்ப்பிணியாக உள்ளார்.
இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விக்னேஷ் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் மனமுடைந்த விக்னேஷ், வீட்டின் அருகில் உள்ள மரத்தில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விக்னேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






