என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலூர் மாவட்ட அரசு அதிகாரி கொரோனாவுக்கு பலி
Byமாலை மலர்17 May 2021 6:15 PM GMT (Updated: 17 May 2021 6:15 PM GMT)
கடலூர் மாவட்ட அரசு அதிகாரி கொரோனாவுக்கு பலியான நிலையில் இதை அறிந்ததும் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கடலூர்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). இவர் கடலூர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனராக கடந்த 7-ந்தேதி பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற மறுநாளே அவருக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த் தொற்று அறிகுறி இருந்தது. இதையடுத்து அவர் உமிழ் நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் அவருக்கு நோய் தொற்று உறுதியானது.
இருப்பினும் அவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இறுதியில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதை அறிந்ததும் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவர்களும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). இவர் கடலூர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனராக கடந்த 7-ந்தேதி பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற மறுநாளே அவருக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த் தொற்று அறிகுறி இருந்தது. இதையடுத்து அவர் உமிழ் நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் அவருக்கு நோய் தொற்று உறுதியானது.
இருப்பினும் அவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இறுதியில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதை அறிந்ததும் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவர்களும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X