என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
ஒரே நாளில் கொரோனாவுக்கு 10 பேர் பலி - புதிதாக 853 பேருக்கு பாதிப்பு உறுதி
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 37 ஆயிரத்து 209 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 10 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். புதிதாக 853 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 37 ஆயிரத்து 209 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் இதுவரை இல்லாத நிலையில் 853 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இவர்களில் கேரளா, சென்னை, மதுரை, திருப்பூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் இருந்து கடலூர், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, பண்ருட்டி, கம்மாபுரம் ஆகிய இடங்களுக்கு வந்த 10 பேருக்கும், அறுவை சிகிச்சைக்கு முன்பு உள்ள கடலூரைச் சேர்ந்த 2 நோயாளிகளுக்கும் நோய்த்தொற்று உறுதியானது.
இது தவிர சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 198 பேருக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 643 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
நேற்று முன்தினம் வரை 32 ஆயிரத்து 618 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றிருந்தனர். நேற்று ஒரே நாளில் 272 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் வரை 389 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர். நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 10 பேர் பலியாகி உள்ளனர். இதன் விவரம் வருமாறு:-
குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 51 வயது பெண், நெய்வேலியை சேர்ந்த 65 வயது முதியவர், சிதம்பரத்தை சேர்ந்த 70 வயது முதியவர் ஆகிய 3 பேரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், கம்மாபுரத்தை சேர்ந்த 52 வயது ஆண் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 72 வயது முதியவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 52 வயது பெண் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 30 வயது ஆண், 68 வயது முதியவர், நெய்வேலியை சேர்ந்த 73 வயது முதியவர் ஆகிய 3 பேர் கடலூர் அரசு மருத்துவமனையிலும், கம்மாபுரத்தை சேர்ந்த 70 வயது முதியவர் திருச்சி தனியார் மருத்துவமனையிலும் நோய்த்தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு உமிழ் நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் நோய்த்தொற்று உறுதியானது. இருப்பினும் அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 399 ஆக உயர்ந்தது.
இது தவிர கொரோனா பாதித்த 3,874 பேர் கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், 899 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 62 கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளன.
கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 10 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். புதிதாக 853 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 37 ஆயிரத்து 209 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் இதுவரை இல்லாத நிலையில் 853 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இவர்களில் கேரளா, சென்னை, மதுரை, திருப்பூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் இருந்து கடலூர், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, பண்ருட்டி, கம்மாபுரம் ஆகிய இடங்களுக்கு வந்த 10 பேருக்கும், அறுவை சிகிச்சைக்கு முன்பு உள்ள கடலூரைச் சேர்ந்த 2 நோயாளிகளுக்கும் நோய்த்தொற்று உறுதியானது.
இது தவிர சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 198 பேருக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 643 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
நேற்று முன்தினம் வரை 32 ஆயிரத்து 618 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றிருந்தனர். நேற்று ஒரே நாளில் 272 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் வரை 389 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர். நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 10 பேர் பலியாகி உள்ளனர். இதன் விவரம் வருமாறு:-
குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 51 வயது பெண், நெய்வேலியை சேர்ந்த 65 வயது முதியவர், சிதம்பரத்தை சேர்ந்த 70 வயது முதியவர் ஆகிய 3 பேரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், கம்மாபுரத்தை சேர்ந்த 52 வயது ஆண் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 72 வயது முதியவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 52 வயது பெண் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 30 வயது ஆண், 68 வயது முதியவர், நெய்வேலியை சேர்ந்த 73 வயது முதியவர் ஆகிய 3 பேர் கடலூர் அரசு மருத்துவமனையிலும், கம்மாபுரத்தை சேர்ந்த 70 வயது முதியவர் திருச்சி தனியார் மருத்துவமனையிலும் நோய்த்தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு உமிழ் நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் நோய்த்தொற்று உறுதியானது. இருப்பினும் அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 399 ஆக உயர்ந்தது.
இது தவிர கொரோனா பாதித்த 3,874 பேர் கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், 899 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 62 கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளன.
Next Story






