என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 400 படுக்கைகள்
Byமாலை மலர்12 May 2021 6:25 PM GMT (Updated: 12 May 2021 6:25 PM GMT)
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 400 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தொற்று கண்டறியப்படும் நபர்களுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வேலூர் பென்ட்லேன்ட், இ.எஸ்.ஐ., அடுக்கம்பாறை, குடியாத்தம் ஆகிய 4 அரசு மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு வார்டுகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
வேலூர் பென்ட்லேன்ட், இ.எஸ்.ஐ. ஆகிய மருத்துவமனைகளில் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் முதற்கட்டமாக அனுமதிக்கப்படுவார்கள். அங்கு அளிக்கப்படும் சிகிச்சையில் பாதிப்பு குறையாதவர்கள் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளவர்களுக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு 550 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிறப்பு வார்டு இயங்கி வருகிறது. தற்போது தொற்று அதிகரிப்பதால் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக அங்கு செல்கின்றனர். அதன்காரணமாக படுக்கைகள் இல்லாத நிலை காணப்படுகிறது.
மூச்சுத்திணறல் மற்றும் மோசமான நிலையில் மருத்துவமனைக்கு வரும் கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் இல்லாததால் ஆம்புலன்சில் காக்க வைக்கும் நிலை காணப்பட்டது. அதனை தவிர்க்க மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவின் அருகே காலி இடத்தில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்க தகரத்தால் ஷெட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 400 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 1,200 படுக்கைகள் உள்ளன. அவற்றில் கொரோனா சிறப்பு வார்டில் 550 படுக்கைகள் பயன்படுத்தப்படுகிறது. அதில், 350 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவை. தொற்று அதிகரிப்பு காரணமாக பிரசவம் மற்றும் குழந்தைகள்பிரிவு ஆகியவற்றை தவிர மற்ற சிகிச்சை பிரிவில் உள்ள படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 400 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி உடையதாக மாற்றப்பட உள்ளது. இந்த படுக்கைகளில் மூச்சுத் திணறலால் அவதிப்படும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். 400 சாதாரண படுக்கைகளை ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளாக மாற்றும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக படுக்கைகள் அமைந்தால் ஆக்சிஜன் தேவை மேலும் அதிகரிக்கும். எனவே மருத்துவமனையில் கூடுதலாக ஒரு ஆக்சிஜன் கொள்கலன் அமைக்கப்பட உள்ளது என்றனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தொற்று கண்டறியப்படும் நபர்களுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வேலூர் பென்ட்லேன்ட், இ.எஸ்.ஐ., அடுக்கம்பாறை, குடியாத்தம் ஆகிய 4 அரசு மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு வார்டுகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
வேலூர் பென்ட்லேன்ட், இ.எஸ்.ஐ. ஆகிய மருத்துவமனைகளில் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் முதற்கட்டமாக அனுமதிக்கப்படுவார்கள். அங்கு அளிக்கப்படும் சிகிச்சையில் பாதிப்பு குறையாதவர்கள் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளவர்களுக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு 550 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிறப்பு வார்டு இயங்கி வருகிறது. தற்போது தொற்று அதிகரிப்பதால் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக அங்கு செல்கின்றனர். அதன்காரணமாக படுக்கைகள் இல்லாத நிலை காணப்படுகிறது.
மூச்சுத்திணறல் மற்றும் மோசமான நிலையில் மருத்துவமனைக்கு வரும் கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் இல்லாததால் ஆம்புலன்சில் காக்க வைக்கும் நிலை காணப்பட்டது. அதனை தவிர்க்க மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவின் அருகே காலி இடத்தில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்க தகரத்தால் ஷெட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 400 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 1,200 படுக்கைகள் உள்ளன. அவற்றில் கொரோனா சிறப்பு வார்டில் 550 படுக்கைகள் பயன்படுத்தப்படுகிறது. அதில், 350 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவை. தொற்று அதிகரிப்பு காரணமாக பிரசவம் மற்றும் குழந்தைகள்பிரிவு ஆகியவற்றை தவிர மற்ற சிகிச்சை பிரிவில் உள்ள படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 400 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி உடையதாக மாற்றப்பட உள்ளது. இந்த படுக்கைகளில் மூச்சுத் திணறலால் அவதிப்படும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். 400 சாதாரண படுக்கைகளை ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளாக மாற்றும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக படுக்கைகள் அமைந்தால் ஆக்சிஜன் தேவை மேலும் அதிகரிக்கும். எனவே மருத்துவமனையில் கூடுதலாக ஒரு ஆக்சிஜன் கொள்கலன் அமைக்கப்பட உள்ளது என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X