என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சாராயம் விற்ற வாலிபர் கைது

    கிருமாம்பாக்கம் அருகே சாராயம் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாகூர்:

    கிருமாம்பாக்கம் போலீசார், உச்சிமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் விற்றுக் கொண்டிருந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், பனித்திட்டு பகுதியை சேர்ந்த சத்யராஜ் (வயது 26) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து சாராய பாட்டில்கள் மற்றும் ரூ.1500 பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×