என் மலர்
செய்திகள்

டாஸ்மாக்
டாஸ்மாக் கடை திறக்கப்படும் நேரம் மாற்றம்
கொரோனா கட்டுப்படுத்த மளிகை, காய்கறி கடைகளுக்கு நேரக்கட்டுபாடு விதிக்கப்பட்ட நிலையில், டாஸ்மாக் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நாளை முதல் அனைத்து கடைகளும் பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள் தற்போது பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு மூடப்படுகிறது. தொற்று பரவல் காரணமாக பார்கள் மூடப்பட்டுள்ளன.
இந்தநிலையில் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் நாளை வழக்கமான நேரத்துக்கு திறக்கப்படுமா? அல்லது மூடப்படுமா என்ற கேள்வி மதுப்பிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கொரோனா காலத்தில் டாஸ்மாக் வருமானம் குறைந்துள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மதுக்கடைகள் கடந்தவாரம் முதல் மூடப்படுவதால் மொத்தமாக வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
இத்தகைய சூழலில் கொரோனா கட்டுப்பாடுகள் நாளை முதல் மேலும் தீவிரப்படுத்தப்படுவதால் டாஸ்மாக் கடை செயல்படும் நேரத்தை மாற்ற அரசு முடிவு செய்தது.
பகல் 12 மணிக்கு பிறகு மளிகை கடைகள், காய்கறி கடைகள் ஓட்டல்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்படுவதால் மதுக்கடைகளை மட்டும் திறந்து வைப்பது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தக்கூடும்.
மதுக்கடைகள் மூலம் கொரோனா பரவாதா? என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழக்கூடும். அதனால் டாஸ்மாக் கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கலாமா என்று அரசு ஆலோசனை செய்தது.

இந்த நிலையில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும் என அறிவித்துள்ளது.
காலையில் எழுந்தவுடனே டாஸ்மாக் கடைவாசலில் மதுப்பிரியர்கள் குவிந்து கிடக்கிறார்கள் என்ற விமர்சனம் எழுந்த நிலையில், அரசு கடை திறக்கும் நேரத்தை மதியம் 2 மணிக்கு மாற்றியது. தற்போது கொரோனா 2-வது அலை, மதுப்பிரியர்களை காலையில்லேயே குடிக்க வைக்க உள்ளது.
Next Story