என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேதாரண்யத்தில் வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மின்கம்பியில் உரசி தீ விபத்து - தீக்காயமடைந்த டிரைவர் பலி
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு ஒன்றியம் காடந்தேத்தியில் இருந்து வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மின்கம்பி உரசி தீ பிடித்தது. தஞ்சாவூரை சேர்ந்தவர் ரகுபதி (வயது 54) டிரைவர்.
இவர் நேற்று காலை தஞ்சாவூரிலிருந்து வந்து தலைஞாயிறு காடந்தேத்தி பகுதியில் உள்ள வயலில் வைக்கோல் கட்டுகளை லாரியில் ஏற்றி தஞ்சைக்கு புறப்பட்டு சென்றார்
அப்போது மின்கம்பி உரசி வைக்கோல் லாரி தீப்பிடித்தது இதை கவனித்த டிரைவர் ரகுபதி அருகில் வீடு இருந்ததால் தண்ணீர் உள்ள இடத்திற்கு லாரியை ஓட்டிச் சென்றார் அப்போது லாரியில் தீ மளமளவென்று பரவி லாரியும் எரிந்தது இந்த தீ விபத்தில் டிரைவர் ரகுபதியும் காயமடைந்தார்.
உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு மேலும் பரவாமல் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் காயமடைந்த ரகுபதி திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து தலைஞாயிறு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்