என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாவட்டத்தில் பெண் உள்பட 3 பேர் கொரோனாவுக்கு பலி - மேலும் 195 பேருக்கு தொற்று உறுதி
Byமாலை மலர்28 April 2021 6:03 PM GMT (Updated: 28 April 2021 6:03 PM GMT)
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 29 ஆயிரத்து 168 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 316 பேர் பலியான நிலையில், 27 ஆயிரத்து 284 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 29 ஆயிரத்து 168 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 316 பேர் பலியான நிலையில், 27 ஆயிரத்து 284 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 3 பேர் பலியாகி உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
சிதம்பரத்தை சேர்ந்தவர் 79 வயது முதியவர். உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர், சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரிடம் உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து அவரை தனி வார்டில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 61 வயது பெண், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், பண்ருட்டியை சேர்ந்த 81 வயது முதியவர் கடலூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று அவர்கள் 2 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இதற்கிடையே நேற்று 195 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது டெல்லி, சென்னை, கோவை, திண்டுக்கல், திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து கடலூர் வந்த 19 பேருக்கும், அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த 3 பேருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 74 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 99 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது.
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 363 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று மட்டும் 310 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இதுதவிர கொரோனாவால் பாதிக்கப்பட்ட 924 பேர் கடலூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளிலும், 526 பேர் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 29 ஆயிரத்து 168 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 316 பேர் பலியான நிலையில், 27 ஆயிரத்து 284 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 3 பேர் பலியாகி உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
சிதம்பரத்தை சேர்ந்தவர் 79 வயது முதியவர். உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர், சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரிடம் உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து அவரை தனி வார்டில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 61 வயது பெண், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், பண்ருட்டியை சேர்ந்த 81 வயது முதியவர் கடலூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று அவர்கள் 2 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இதற்கிடையே நேற்று 195 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது டெல்லி, சென்னை, கோவை, திண்டுக்கல், திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து கடலூர் வந்த 19 பேருக்கும், அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த 3 பேருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 74 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 99 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது.
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 363 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று மட்டும் 310 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இதுதவிர கொரோனாவால் பாதிக்கப்பட்ட 924 பேர் கடலூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளிலும், 526 பேர் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X