என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
5 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசி வருகை
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகள், சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்துக்கு முதற்கட்டமாக 1 லட்சத்து 40 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் வந்தன. அவை தீர்ந்தவுடன் 1 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2-ம் கட்டமாக 13 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்தன. அவற்றில் தற்போது 4 ஆயிரம் இருப்பில் உள்ளன. இந்த நிலையில் நேற்று வேலூர் மாவட்டத்துக்கு 3 ஆயிரம் டோஸ் கோவாக்சின், 2 ஆயிரம் டோஸ் கோவிஷூல்டு என்று மேலும் 5 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்தன. அவை வேலூர் அண்ணாசாலையில் உள்ள மாவட்ட மருந்து வளாகத்தில் குளிர்சாதன கிடங்கில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகள், சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்துக்கு முதற்கட்டமாக 1 லட்சத்து 40 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் வந்தன. அவை தீர்ந்தவுடன் 1 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2-ம் கட்டமாக 13 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்தன. அவற்றில் தற்போது 4 ஆயிரம் இருப்பில் உள்ளன. இந்த நிலையில் நேற்று வேலூர் மாவட்டத்துக்கு 3 ஆயிரம் டோஸ் கோவாக்சின், 2 ஆயிரம் டோஸ் கோவிஷூல்டு என்று மேலும் 5 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்தன. அவை வேலூர் அண்ணாசாலையில் உள்ள மாவட்ட மருந்து வளாகத்தில் குளிர்சாதன கிடங்கில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story






