என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேளாங்கண்ணி அருகே பாம்பு கடித்து பெண் ஊராட்சி உறுப்பினர் பலி
Byமாலை மலர்26 April 2021 10:54 AM GMT (Updated: 26 April 2021 10:54 AM GMT)
வேளாங்கண்ணி அருகே வயலில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த பெண்ணை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேளாங்கண்ணி:
நாகை மாவட்டம் கீழையூர் போலீஸ் சரகம் காமேஸ்வரம் வைரவன் காடு பகுதியை சேர்ந்தவர் பூமாலை. இவருடைய மனைவி தமயந்தி (வயது 36). ஊராட்சி மன்ற உறுப்பினர். இவர் சம்பவத்தன்று தனது வீட்டுக்கு பின்புறம் உள்ள கடலை சாகுபடி செய்யப்பட்ட வயலில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார்.
அப்போது தமயந்தியை பாம்பு கடித்து விட்டது. உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமயந்தி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X