search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மதுகுடிக்க பள்ளி வாசலில் தண்ணீர் பிடித்ததை கண்டித்தவர்கள் மீது தாக்குதல்

    புதுச்சேரி அருகே மதுகுடிக்க பள்ளி வாசலில் தண்ணீர் பிடித்ததை கண்டித்தவர்களை தாக்கிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேடு தட்சணாமூர்த்தி நகரில் பள்ளி வாசல் உள்ளது. நேற்று மாலை இந்த பள்ளி வாசலில் அதேபகுதியை சேர்ந்த சாகுல்அமீது (வயது56) மற்றும் ஜமாத்தார்கள் அரசு விதிகளை பின்பற்றி தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது சண்முகாபுரம் அண்ணாவீதியை சேர்ந்த பிரான்சிஸ் (26) மற்றும் அணைக்கரை வீதியை சேர்ந்த அருண்குமார் (38) ஆகியோர் பள்ளி வாசலில் அத்துமீறி நுழைந்து மது குடிப்பதற்காக பாட்டிலில் தண்ணீர் பிடித்தனர். இதனை சாகுல்அமீது மற்றும் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் கண்டித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பிரான்சிஸ், அருண்குமார் ஆகியோர் சாகுல்அமீதையும் மற்ற 2 பேரையும் தாக்கினார் கள். மேலும் பள்ளி வாசலை இடித்து விடுவோம் என்றும் ஒவ்வொருவரின் தலையை வெட்டி வீசிவிடுவோம் என்று மிரட்டினர்.

    அதோடு பள்ளி வாசல் எதிரே நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களை கீழே தள்ளிவிட்டு சேதப் படுத்திவிட்டு சென்று விட்டனர்.

    இதுகுறித்து சாகுல்அமீது கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பிரான்சிஸ், அருண்குமார் ஆகியோரை தேடி வருகிறார்கள். 

    Next Story
    ×