என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை - 5 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்24 April 2021 1:43 PM GMT (Updated: 24 April 2021 1:43 PM GMT)
காரைக்குடி அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமைப்படுத்திய 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள கண்டனூரை சேர்ந்தவர் சீதாலட்சுமி (வயது 30).புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா முத்தூரைச் சேர்ந்தவர் பழனிவேல் (31) இருவரும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது காதலித்து 2013-ம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் கணவர் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். சீதாலட்சுமியின் கல்லூரி படிப்புக்கு கணவர் குடும்பத்தினர் தடை விதித்ததால் கணவன்-மனைவி இருவரும் தனிக்குடித்தனம் நடத்தினர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உண்டு.
இந்த நிலையில் பழனிவேல் குடும்பத்தினர், சீதாலட்சுமியிடம் வரதட்சணை கேட்டு வற்புறுத்தியதாக தெரிகிறது. பின்னர் வெளிநாட்டுக்கு சென்று திரும்பிய தனது கணவர் பழனிவேல் தனது தந்தையுடன் வசித்து வந்து உள்ளார். அவரை பார்க்க சீதாலட்சுமியை அனுமதிக்கவில்லை.
இதுகுறித்து சீதாலட்சுமி காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, விசாரணை மேற்கொண்டு சீதாலட்சுமியின் கணவர் பழனிவேல், மாமனார் முத்தையா, மாமியார் ஜெயா மற்றும் பழனிவேலின் சகோதரிகள் 2 பேர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X