என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவால் சுற்றுலா பயணிகளுக்கு தடை: செட்டிநாடு கைத்தறி சேலைகள் தேக்கம்
Byமாலை மலர்24 April 2021 1:30 PM GMT (Updated: 24 April 2021 1:30 PM GMT)
கொரோனாவால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் செட்டிநாடு கைத்தறி சேலைகள் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கின்றன.
காரைக்குடி:
செட்டிநாடு என்றாலே முதலில் கட்டிட கலைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டு தான் நினைவுக்கு வரும். அதற்கு அடுத்தப்படியாக செட்டிநாடு உணவு வகைகளும், செட்டிநாட்டு பகுதியில் தயாராகும் கைத்தறி சேலை ரகங்களும் தான்.
காரைக்குடி பகுதியில் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் கைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொழிலாளர்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் செட்டிநாடு சேலைகளுக்கு புவிசார் குறியீடும் கிடைத்துள்ளது.
காரைக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள செட்டிநாடு பகுதியில் அதிகளவில் கலைநயமிக்க அரண்மனை வீடுகள் உள்ளன.. இந்த வீடுகளை பார்த்து ரசிப்பதற்காக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம். இவ்வாறு வரும் அவர்கள் இங்கு கைத்தறி மூலம் தயாராகும் செட்டி நாட்டு சுங்கடி சேலைகள் மற்றும் கண்டாங்கி சேலைகளை வாங்கி செல்வார்கள்.
தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் சுற்றுலா தலங்களை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் யாரும் வருவதில்லை.
சுற்றுலா பயணிகள் வராததால் செட்டிநாடு பகுதியில் கைத்தறி சேலைகள் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கின்றன. இதனால் கைத்தறி நெசவாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து கானாடுகாத்தான் பகுதியில் தறி கூடம் நடத்தி வரும் வெங்கட்ராமன் கூறியதாவது-
ஏற்கனவே கடந்தாண்டு நிலவிய கொரோனா தொற்று காரணமாக எங்களது தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் அந்த பாதிப்பில் இருந்து தற்போது தான் மீண்டு வந்துள்ளோம். இந்நிலையில் தற்போது கொரோனா 2-வது அலை காரணமாக இரவு ஊரடங்கு மற்றும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் கைத்தறி சேலைகள் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கின்றன. இரவு நேர ஊரடங்கால் சரக்கு வாகனங்களில் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு செட்டிநாடு கைத்தறி சேலைகள் அனுப்புவதில் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X