என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகை, வேதாரண்யத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்21 April 2021 3:34 PM GMT (Updated: 21 April 2021 3:34 PM GMT)
நாகை அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மத்திய சங்க துணைத்தலைவர் இடும்பன்சாமி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. பணிமனை தலைவர் பஞ்சநாதன், தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் வார ஓய்வை பறிக்க கூடாது. போக்குவரத்து தொழிலாளர்களின் அரசு விடுப்பு விதிமுறைகளை மாற்ற கூடாது. சம்பளத்தை பறிக்கும் திட்டங்களை செயல்படுத்த கூடாது. தொழிற்சங்கத்தின் அறிவுரைகளை மீறக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
அதேபோல் வேதாரண்யம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தலைவர் ஹரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் விடுமுறை எடுப்பதில் உள்ள குளறுபடிகளை போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X