search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஈரோடு மாவட்டத்தில் 5,161 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத பெட்ரோல் பங்க் மற்றும் பேக்கரிக்கு சீல் வைக்கப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நிறுவனங்கள், ஓட்டல்கள், பேக்கரிகள், பெட்ரோல் பங்க் ஆகியவற்றில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து அதிகாரிகள் தினமும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோவை-சேலம் செல்லும் முக்கிய சாலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்க்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்க் மற்றும் பேக்கரியில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதது தெரியவந்தது இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கதிரவன் உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க் மற்றும் பேக்கரிக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சியில் மாரப்பா 2-வது வீதி, பூசாரி சென்னிமலை 5-வது வீதி, பிருந்தாவன் அப்பார்ட்மெண்ட், ரெயில்வே காலனி, பெரியண்ணன் வீதி, சாமியப்பா 3-வது வீதி, முத்து வேலப்ப மெயின் வீதி, மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரியம், கந்தாம்பாளையம், எஸ்.கே.சி.ரோடு, அருள்வேலவன் நகர் பி.பெ.அக்ரஹாரம், ராஜகோபால் தோட்டம், செங்காடு, கருங்கல்பாளையம், பொன்னுசாமி வீதி, கே.என்.கே.ரோடு, நாராயணவலசு, முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரியம், வீரப்பன்சத்திரம் மற்றும் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் ராமர் எக்ஸ்டன்சன், செங்கோட்டையன் நகர், சென்னிமலையில் ராக் மவுண்ட் சிட்டி பெரியவலசு, வெள்ளிரான்காடு ஈங்கூர்மேற்கு, ஈங்கூர், பெருந்துறை வட்டத்தில் வெட்டையன்கிணறு, கந்தாம்பாளையம், வாய்க்கால்மேடு, பெரியவேட்டுவம்பாளையம், சத்தியமங்கலம் நகராட்சியில் கோணமூலை, மேட்டூர், வரதம்பாளையம், பவானி நகராட்சியில் கவுந்தப்பாடி, சாத்தநாய்க்கனூர், ஒரிச்சேரி, குருப்பநாயக்கன்பாளையம், மாந்தொழிலாளர் முதல் வீதி, பவானி மெயின்ரோடு ஆப்பக்கூடல், டி.என்.பாளையம் நகராட்சியில் ராஜீவ்காலனி அரக்கன்கோட்டை, பட்டத்தரசி அம்மன் கோவில் வீதி வீரச்சின்னனூர், கொடுமுடி வட்டத்தில் சிவகிரி, கணபதிபாளையம், அம்மாபேட்டையில் சின்னகோணமூக்கனூர், குருவரெட்டியூர், மொடக்குறிச்சி வட்டத்தில் நஞ்சை ஊத்துக்குளி, நகராட்சி நகர், கஸ்பாபேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த 268 பேர் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் 49 கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள 1,234 வீடுகளில் 5 ஆயிரத்து 161 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    எனவே, சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்க்கான அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று டாக்டர்களிடம் ஆலோசனைகளை பெற வேண்டும்.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.
    Next Story
    ×