என் மலர்
செய்திகள்

நேரு பூங்காவில் உள்ள புல்தரையை சமன்படுத்தும் பணி நடப்பதை காணலாம்.
கோத்தகிரி நேரு பூங்காவை தயார் செய்யும் பணி
கோடைசீசன் துவங்குவதையொட்டி, கடந்த பிப்ரவரி மாதம் பூங்காவில் 40 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
கோத்தகிரி:
கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் உள்ள நேரு பூங்கா சிறந்த சுற்றுலா மையமாக உள்ளது. இந்தப் பூங்காவில் அழகிய புல் தரைகள், ரோஜா பூந்தோட்டம், வண்ண மலர்கள், சிறுவர் விளையாட்டு பூங்கா ஆகியவை உள்ளன. இந்த பூங்காவில் ஆண்டுதோறும் கோடை விழாவையொட்டி காய்கறி கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பூங்கா மூடப்பட்டதால் காய்கறி கண்காட்சி நடத்தப்படவில்லை. தற்போது மீண்டும் பூங்கா திறக்கப்பட்டு 50 சதவீத சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கோடைசீசன் துவங்குவதையொட்டி, கடந்த பிப்ரவரி மாதம் பூங்காவில் 40 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதுபோன்று பூங்காவில் உள்ள செடிகளை தயார்படுத்தும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
தற்போது அங்கு புல் தரைகளில் அதிகமாக வளர்ந்து உள்ள புற்களை சமன்படுத்தும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பூங்காவில் உள்ள பிற செடிகளை வெட்டி அழகுபடுத்தும் பணியும் நடந்து வருகிறது.
இது குறித்து பூங்கா ஊழியர்கள் கூறும்போது, அடுத்த மாதத்துக்குள் பூங்காவில் உள்ள அனைத்து மலர்களும் பூத்து குலுங்கி சீசனுக்கு தயாராகிவிடும். தற்போது கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால், காய்கறி கண்காட்சி நடத்தப்படுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது. இருந்தபோதிலும் பூங்காவில் உள்ள அனைத்து செடிகளையும், பராமரித்து வருகிறோம் என்றனர்.
கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் உள்ள நேரு பூங்கா சிறந்த சுற்றுலா மையமாக உள்ளது. இந்தப் பூங்காவில் அழகிய புல் தரைகள், ரோஜா பூந்தோட்டம், வண்ண மலர்கள், சிறுவர் விளையாட்டு பூங்கா ஆகியவை உள்ளன. இந்த பூங்காவில் ஆண்டுதோறும் கோடை விழாவையொட்டி காய்கறி கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பூங்கா மூடப்பட்டதால் காய்கறி கண்காட்சி நடத்தப்படவில்லை. தற்போது மீண்டும் பூங்கா திறக்கப்பட்டு 50 சதவீத சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கோடைசீசன் துவங்குவதையொட்டி, கடந்த பிப்ரவரி மாதம் பூங்காவில் 40 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதுபோன்று பூங்காவில் உள்ள செடிகளை தயார்படுத்தும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
தற்போது அங்கு புல் தரைகளில் அதிகமாக வளர்ந்து உள்ள புற்களை சமன்படுத்தும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பூங்காவில் உள்ள பிற செடிகளை வெட்டி அழகுபடுத்தும் பணியும் நடந்து வருகிறது.
இது குறித்து பூங்கா ஊழியர்கள் கூறும்போது, அடுத்த மாதத்துக்குள் பூங்காவில் உள்ள அனைத்து மலர்களும் பூத்து குலுங்கி சீசனுக்கு தயாராகிவிடும். தற்போது கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால், காய்கறி கண்காட்சி நடத்தப்படுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது. இருந்தபோதிலும் பூங்காவில் உள்ள அனைத்து செடிகளையும், பராமரித்து வருகிறோம் என்றனர்.
Next Story






