search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    புதுவையில் ஒரே நாளில் 6 ஆயிரத்து 348 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது- சுகாதாரத்துறை செயலர் தகவல்

    கொரோனா நோய் தொற்றிலிருந்து புதுவை மக்களை பாதுகாக்க புதுவை அரசு சுகாதாரத்துறை மூலமாக பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 348 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து புதுவை சுகாதாரத்துறை செயலர் டாக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கொரோனா நோய் தொற்றிலிருந்து புதுவை மக்களை பாதுகாக்க புதுவை அரசு சுகாதாரத்துறை மூலமாக பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி திருவிழா என்கிற மிகப்பெரிய கொரோனா தடுப்பூ முகாம் கடந்த 11-ந் தேதி தொடங்கியது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை இந்த திருவிழா நடைபெறுகிறது.

    இந்த தடுப்பூசி திருவிழாவில் மக்கள் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்று தடுப்பூசியை எடுத்து வருகின்றனர்.

    கடந்த 6 நாட்களில் சுமார் 62 ஆயிரத்து 259 பேர் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். நேற்று மட்டும் 6 ஆயிரத்து 348 பேர் தடுப்பூசி எடுத்துள்ளனர்.

    தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் யாருக்கும் இதுவரை ஒவ்வாமை போன்ற எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லை.

    கோப்புபடம்

    எனவே மக்கள் அச்சமோ, தயக்கமோ இன்றி இந்த தடுப்பூசியை எடுத்து கொள்ளலாம். இந்த தடுப்பூசி திருவிழாவை பயன்படுத்தி 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.

    புதுவையில் கொரோனா பரவலின் 2-வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நோயின் தாக்கத்தையும், தீவிரத்தையும் புதுவை மக்கள் நன்கு உணர்ந்திருந்த போதிலும் ஒரு சிலர் கொரோனா தடுப்பு வழிமுறைகளான முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தப்படுத்தி கொள்ளுதல் போன்றவற்றை முறையாக பின்பற்றாமல் இன்னமும் அலட்சியமாக இருந்து வருகிறார்கள்.

    இது கொரோனா தொற்று பரவலுக்கு வழி வகுப்பதோடு மட்டுமல்லாமல் அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் செயலாகவும் அமைகிறது.

    எனவே அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிப்பதன் மூலம் கொரோனா நோயை நம்மிடமிருந்து முற்றிலுமாக அகற்ற முடிவும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×