என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவுக்கு முதியவர் பலி - மேலும் 102 பேருக்கு பாதிப்பு உறுதி
Byமாலை மலர்17 April 2021 5:58 PM GMT (Updated: 17 April 2021 5:58 PM GMT)
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 27 ஆயிரத்து 152 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 27 ஆயிரத்து 152 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், மேலும் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவர்களில் கேரளாவில் இருந்து நல்லூர் வந்த ஒருவர், அந்தமானில் இருந்து பண்ருட்டி வந்த ஒருவர், ஆந்திராவில் இருந்து பண்ருட்டி வந்த ஒருவர், பெங்களூருவில் இருந்து கடலூர் வந்த ஒருவர், ராஜஸ்தான், சென்னை, வேலூரில் இருந்து பண்ருட்டி, அண்ணாகிராமம், குறிஞ்சிப்பாடி வந்த 5 பேருக்கும், சளி, காய்ச்சல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 32 பேருக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 61 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 775 பேர் குணமடைந்து வீடு திரும்பி நிலையில், நேற்று 120 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் வரை 298 பேர் உயிரிழந்த நிலையில் நேற்று ஒருவர் கொரோனாவுக்கு பலியானார். இதன் விவரம் வருமாறு:-
அண்ணாகிராமத்தை சேர்ந்த 70 வயது முதியவர் சளி, காய்ச்சல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில், நோய்த்தொற்று உறுதியானது. இருப்பினும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொரோனா பாதித்த 713 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 347 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 277 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 27 ஆயிரத்து 152 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், மேலும் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவர்களில் கேரளாவில் இருந்து நல்லூர் வந்த ஒருவர், அந்தமானில் இருந்து பண்ருட்டி வந்த ஒருவர், ஆந்திராவில் இருந்து பண்ருட்டி வந்த ஒருவர், பெங்களூருவில் இருந்து கடலூர் வந்த ஒருவர், ராஜஸ்தான், சென்னை, வேலூரில் இருந்து பண்ருட்டி, அண்ணாகிராமம், குறிஞ்சிப்பாடி வந்த 5 பேருக்கும், சளி, காய்ச்சல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 32 பேருக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 61 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 775 பேர் குணமடைந்து வீடு திரும்பி நிலையில், நேற்று 120 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் வரை 298 பேர் உயிரிழந்த நிலையில் நேற்று ஒருவர் கொரோனாவுக்கு பலியானார். இதன் விவரம் வருமாறு:-
அண்ணாகிராமத்தை சேர்ந்த 70 வயது முதியவர் சளி, காய்ச்சல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில், நோய்த்தொற்று உறுதியானது. இருப்பினும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொரோனா பாதித்த 713 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 347 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 277 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X