என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ராஜபாளையத்தில் பெண் பஞ்சாலை தொழிலாளி மீது தாக்குதல்- மேற்பார்வையாளர் மீது புகார்
ராஜபாளையம்:
ராஜபாளையம்-மதுரை சாலையில் தனியார் நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலையில் எலக்ட்ரிகல் சூப்பர்வைசராக கருப்பசாமி என்பவர் பணியாற்றி வருகிறார்.
இதே ஆலையில் பெண் தொழிலாளியாக ராஜபாளையம் சோழராஜபுரம் தெருவை சேர்ந்த சுப்புலட்சுமி (வயது 55) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
சுப்புலட்சுமி வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று கருப்புசாமி, அவரை நோக்கி வந்து தன் மீது களங்கம் கூறியதாக கூறி திடீரென்று காலில் கிடந்த செருப்பை எடுத்து சுப்புலட்சுமியை சரமாரியாக அடித்தாராம்.
இதுகுறித்து ஆலை நிர்வாகத்திடம் சுப்புலட்சுமி புகார் கூறியபோது ஆலை நிர்வாகத்திற்கு கருப்பசாமி கட்டுப்பட மறுத்து விட்டாராம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் மாரியப்பன், மாவட்டக் குழு உறுப்பினர் சுப்பிரமணியன், இந்திய ஜனநாயக மாதர் சங்க நகர தலைவர் மேரி உள்பட ஏராளமான தொழிலாளர்கள் கூட்டமாக கூடினர். ஆலை நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற போது, அவர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் காவல் நிலையத்தில் புகார் செய்து தீர்வு காணலாம் என ஆலை நிர்வாகம் கூறியது.
அதன் பேரில் அனைவரும் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு இன்ஸ்பெக்டர் தெய்வம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்