என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ரெட்டியார்பாளையத்தில் மளிகைக்கடைக்காரர் மயங்கி விழுந்து பலி
புதுச்சேரி:
ரெட்டியாபாளையம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் கணேசன் (வயது55). இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் மளிகை கடை நடத்தி வந்தார். இவருக்கு கலாவதி என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக கணேசன் நீரழிவு நோயால் அவதியடைந்து வந்தார். இதற்காக டாக்டரின் ஆலோசனைப்படி மருந்து, மாத்திரைகளும் சாப்பிட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு கணேசன் வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் கணேசனை மீட்டு மூலக்குளத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கணேசன் சுயநினைவு இழந்து போனதால் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கணேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மகன் சிவா கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்