என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
சூளகிரி அருகே கார் மோதி விவசாயி பலி
சூளகிரி அருகே கார் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூளகிரி:
சூளகிரி தாலுகா மேலுமலை அருகே உள்ள இம்மிடிநாயக்கனப்பள்ளியை சேர்ந்தவர் சின்னமாரப்பா (வயது 60). விவசாயி. சம்பவத்தன்று இவர் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் சின்ன மாரப்பா சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






