search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ரெட்டிச்சாவடி அருகே கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை

    ரெட்டிச்சாவடி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கடலூர்:

    ரெட்டிச்சாவடி அருகே உள்ள பெரிய இருசான்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (வயது 33), கொத்தனார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மது பழக்கம் உடைய விக்னேஷ்வரன், தினசரி குடித்து விட்டு வந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

    இந்த நிலையில் சம்பவத்தன்றும் விக்னேஷ்வரன், குடித்து விட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதில் மனமுடைந்த விக்னேஷ்வரன், வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும், பலனின்றி விக்னேஷ்வரன் பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×