search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தூசி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

    தூசி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூசி:

    ராணிப்பேட்டை மாவட்டம் கல்லாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகள் ரேகா (வயது 29). இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா மகாஜனபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமியின் மகன் விஜயகுமாருக்கும் 10 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். விஜயகுமாருக்கும், ரேகாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறால் மனமுடைந்த ரேகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×