search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வில்லியனூர் அருகே கணவன் கண் முன்பு மனைவியை மானபங்கம் செய்த 2 பேருக்கு தர்ம அடி

    வில்லியனூர் அருகே கணவன் கண் முன்பு மனைவியை மானபங்கம் செய்த 2 பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கூடப்பாக்கம் காலனி அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் வீரமுத்து. இவர் நேற்று இரவு தனது மனைவி சங்கீதாவுடன் அப்பகுதியில் தனியார் மதுக்கடை அருகே உள்ள பேக்கரியில் உணவு பொருட்களை வாங்கி கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது குடிபோதையில் வந்த 3 வாலிபர்கள் சங்கீதாவின் சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்தனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீதாவும் அவரது கணவர் வீரமுத்துவும் சத்தம் போட்டனர். உடனே அங்கிருந்தவர்கள் திரண்டு வந்து 3 பேரையும் பிடிக்க முயன்றனர். இதில் ஒருவன் தப்பியோடி விட்டான். மற்ற 2 பேரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    பின்னர் அவர்களை வில்லியனூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்த சுனில்பாரதி, வினோத்குமார் என்பதும், தப்பியோடியவர் உமேஷ்குமார் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடி உமேஷ்குமாரை தேடி வருகிறார்கள்.

    வில்லியனூர் அருகே பொறையூர் காலனியை சேர்ந்த 19 வயது பெண் நேற்று மாலை அரசூர்-பெரம்பை சாலையில் உள்ள டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டில் தட்டச்சு பயிற்சி முடித்து விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அங்குள்ள தனியார் பள்ளி அருகே வந்த போது குடிபோதையில் வந்த வடமாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபர் அந்த பெண்ணை கையை பிடித்து இழுத்து முத்தம் கொடுக்க முயன்றார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பெண் அலறினார். உடனே அங்கிருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து வில்லியனூர் போலீசில் ஒப்படைத்தனர்.
    Next Story
    ×