என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோடு மேற்கு தொகுதியில் மனைவி இறந்த துக்கத்திலும் ஓட்டு பதிவு செய்த முதியவர்
Byமாலை மலர்7 April 2021 10:37 AM GMT (Updated: 7 April 2021 10:37 AM GMT)
மனைவி இறந்த துக்கத்திலும் முதியவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து வரிசையில் நின்று ஓட்டு போட்டு தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
ஈரோடு:
ஈரோடு பெரியசேமூர் மல்லி நகரை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 65). இவரது மனைவி வெள்ளம்மா (50). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ராமதாஸ் கூலி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2 வாரமாக வெள்ளம்மா உடல்நலம் சரியில்லாமல் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகள் முடிக்கப்பட்டு வெள்ளம்மா உடல் நேற்று காலை 11.30 மணி அளவில் ராமதாசிடம் ஒப்படைக்கப்பட்டது.
மனைவி இறந்த துக்கத்தில் இருந்த ராமதாஸ் 12.30 மணி அளவில் கருங்கல்பாளையத்தில் உள்ள ஆத்மாவில் மனைவியின் ஈமச் சடங்குகளை முடித்து கொண்டு வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு அடுத்த நிமிடமே ஈரோடு சி.என்.சி. கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து வரிசையில் நின்று ஓட்டு போட்டு தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
இது குறித்து ராமதாஸ் கூறும்போது:-
என் மனைவி இறந்தது எனக்கு பெரிய துக்கம் என்றாலும், வாக்களிப்பது எனது ஜனநாயக கடமை. அது யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறினார்.
ஈரோடு பெரியசேமூர் மல்லி நகரை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 65). இவரது மனைவி வெள்ளம்மா (50). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ராமதாஸ் கூலி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2 வாரமாக வெள்ளம்மா உடல்நலம் சரியில்லாமல் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகள் முடிக்கப்பட்டு வெள்ளம்மா உடல் நேற்று காலை 11.30 மணி அளவில் ராமதாசிடம் ஒப்படைக்கப்பட்டது.
மனைவி இறந்த துக்கத்தில் இருந்த ராமதாஸ் 12.30 மணி அளவில் கருங்கல்பாளையத்தில் உள்ள ஆத்மாவில் மனைவியின் ஈமச் சடங்குகளை முடித்து கொண்டு வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு அடுத்த நிமிடமே ஈரோடு சி.என்.சி. கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து வரிசையில் நின்று ஓட்டு போட்டு தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
இது குறித்து ராமதாஸ் கூறும்போது:-
என் மனைவி இறந்தது எனக்கு பெரிய துக்கம் என்றாலும், வாக்களிப்பது எனது ஜனநாயக கடமை. அது யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X