search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்களிக்க வந்த ராமதாஸ்
    X
    வாக்களிக்க வந்த ராமதாஸ்

    ஈரோடு மேற்கு தொகுதியில் மனைவி இறந்த துக்கத்திலும் ஓட்டு பதிவு செய்த முதியவர்

    மனைவி இறந்த துக்கத்திலும் முதியவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து வரிசையில் நின்று ஓட்டு போட்டு தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
    ஈரோடு:

    ஈரோடு பெரியசேமூர் மல்லி நகரை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 65). இவரது மனைவி வெள்ளம்மா (50). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ராமதாஸ் கூலி வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 2 வாரமாக வெள்ளம்மா உடல்நலம் சரியில்லாமல் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகள் முடிக்கப்பட்டு வெள்ளம்மா உடல் நேற்று காலை 11.30 மணி அளவில் ராமதாசிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மனைவி இறந்த துக்கத்தில் இருந்த ராமதாஸ் 12.30 மணி அளவில் கருங்கல்பாளையத்தில் உள்ள ஆத்மாவில் மனைவியின் ஈமச் சடங்குகளை முடித்து கொண்டு வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு அடுத்த நிமிடமே ஈரோடு சி.என்.சி. கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து வரிசையில் நின்று ஓட்டு போட்டு தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

    இது குறித்து ராமதாஸ் கூறும்போது:-

    என் மனைவி இறந்தது எனக்கு பெரிய துக்கம் என்றாலும், வாக்களிப்பது எனது ஜனநாயக கடமை. அது யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறினார்.

    Next Story
    ×