search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்லூரி பேராசிரியரின் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை

    புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் வினோதா மற்றும் வன்னியம்பட்டி போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டில் ஆய்வு செய்தனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்லூரி பேராசிரியரின் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மகாத்மா காந்தி நகரில் வசித்து வருபவர் இளங்கோவன். இவர் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மனைவி விஜயகாந்தி. இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோட்டைபட்டியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று விட்டார். இந்தநிலையில் நேற்று மீண்டும் மகாத்மா காந்தி நகரில் வீட்டுக்கு வந்தார்.

    அப்போது வீட்டின் பூட்டுஉடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது ெதரியவந்தது.

    வீட்டில் உள்ள 50 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் வினோதா மற்றும் வன்னியம்பட்டி போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டில் ஆய்வு செய்தனர்.

    மேலும் விருதுநகரிலிருந்து தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் போலீசார் முழுமையான விசாரணைக்கு பிறகு தான் எவ்வளவு நகைகள் கொள்ளை போனது என்பது தெரியவரும்போலீசார் அனைவரும் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்த நேரத்தை பயன்படுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் 2 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை சம்பவம் நடந்து உள்ளது.
    Next Story
    ×