என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதலியார்பேட்டையில் விபத்து: தந்தை-மகள் படுகாயம்
Byமாலை மலர்6 April 2021 12:18 PM GMT (Updated: 6 April 2021 12:18 PM GMT)
முதலியார்பேட்டையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தந்தை-மகள் படுகாயமடைந்தனர்.
புதுச்சேரி:
கருவடிக்குப்பம் சண்முகாநகரை சேர்ந்தவர் கருணாகரன். இவரது உறவினர் அய்யனாரப்பன். நேற்று மாலை அய்யனாரப்பன் தனது மகள் வேதரக்ஷனாவுடன் முதலியார்பேட்டை வண்ணாகுளம் வீதி வழியாக சென்று கொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிளை அய்யனாரப்பன் ஓட்டி செல்ல பின்னால் வேதரக்ஷனா அமர்ந்து சென்றார். அப்போது அங்குள்ள சாலையை கடக்க முயன்ற போது டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக அய்யனாரப்பன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் அய்யனாரப்பனும், வேதரக்ஷனாவும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் அய்யனாரப்பனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. வேதரக்ஷனா பலத்த காயமடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேதரக்ஷனா பிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கருணாகரன் கொடுத்த புகாரின் பேரில் புதுவை கிழக்கு பகுதி போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருவடிக்குப்பம் சண்முகாநகரை சேர்ந்தவர் கருணாகரன். இவரது உறவினர் அய்யனாரப்பன். நேற்று மாலை அய்யனாரப்பன் தனது மகள் வேதரக்ஷனாவுடன் முதலியார்பேட்டை வண்ணாகுளம் வீதி வழியாக சென்று கொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிளை அய்யனாரப்பன் ஓட்டி செல்ல பின்னால் வேதரக்ஷனா அமர்ந்து சென்றார். அப்போது அங்குள்ள சாலையை கடக்க முயன்ற போது டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக அய்யனாரப்பன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் அய்யனாரப்பனும், வேதரக்ஷனாவும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் அய்யனாரப்பனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. வேதரக்ஷனா பலத்த காயமடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேதரக்ஷனா பிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கருணாகரன் கொடுத்த புகாரின் பேரில் புதுவை கிழக்கு பகுதி போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X