என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலூர் மாவட்டத்தில் எந்திரகோளாறு: 13 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு தாமதம்
Byமாலை மலர்6 April 2021 10:59 AM GMT (Updated: 6 April 2021 10:59 AM GMT)
சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் தொகுதிகளுக்குட்பட்ட 13 வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரங்ள் பழுதானது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
சிதம்பரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
அப்போது அந்த வாக்குப்பதிவு எந்திரம் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள். 20 நிமிடங்களுக்கு பின்னர் அந்த எந்திரம் சரி செய்யப்பட்டது. அதன் பின்னர் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
இதேபோல் சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் தொகுதிகளுக்குட்பட்ட 13 வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரங்களும் பழுதானது. இதனால் அந்த வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு தாமதமாக தொடங்கியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X