search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணம் பறிமுதல்
    X
    பணம் பறிமுதல்

    கெலமங்கலம் அருகே காரில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல்

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே காரில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள காருகொண்டப்பள்ளி கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை அவர்கள் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.2 லட்சம் இருப்பது தெரிந்தது. இதுதொடர்பாக காரில் வந்த கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பரமேஷ் என்பவரிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் ஏதும் அவர் கொண்டு வரவில்லை. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்து தளி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
    Next Story
    ×