
புதுவை சட்டசபைக்கு நாளை மறுநாள் (6-ந் தேதி) தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் புதுவை மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளில் 324 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் சுயேட்சை வேட்பாளர் துர்கா பிரசாத் பொம்மடி திடீரென மாயமாகி விட்டார். இது தொடர்பாக அவரது மனைவி ஏனாம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் தனது கணவரை கடந்த 1-ந்தேதி முதல் காணவில்லை என கூறி உள்ளார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தேர்தலுக்கு இன்னும் ஒரு நாட்களே உள்ள நிலையில் சுயேட்சை வேட்பாளர் மாயமாகி இருப்பது ஏனாமில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.