என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புஞ்சைபுளியம்பட்டியில் பறக்கும் படை சோதனை: கேரள வியாபாரியிடம் ரூ. 2 லட்சம் பறிமுதல்
Byமாலை மலர்3 April 2021 9:23 AM GMT (Updated: 3 April 2021 9:23 AM GMT)
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
புஞ்சை புளியம்பட்டி:
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 24 மணி நேரமும் வாகன சோதனை தீவிரமாக நடந்து வருகிறது.
முக்கிய சோதனை சாவடிகளில் துணை ராணுவத்தினர் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி டானா புதூர் சோதனை சாவடியில் இன்று அதிகாலை 2.40 மணயளவில் பவானிசாகர் தொகுதி பறக்கும் படை அதிகாரி மாரிமுத்து தலைமையிலான குழுவினர் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
அப்போது கேரளாவில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது காரில் ரூ. 2 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது. காரில் வந்தவர்களிடம் கேட்ட போது தாங்கள் மாடு வியாபாரிகள் என்றும் மாடு வாங்க அந்தியூர் சென்றதாகவும் தெரிவித்தனர்.
ஆனால் பணத்துக்கு உரிய ஆவணங்கள் அவர்கள் தரவில்லை. இதையடுத்து பறக்கும் படையினர் ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
இதே போல் அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் சோதனை சாவடியில் பர்கூர் மலை பகுதிக்கு செல்லும் வாகனங்களையும், பர்கூரில் இருந்து அந்தியூர் வந்த வாகனங்களையும் நிறுத்தி விடிய,விடிய சோதனை நடத்தினர். வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் மற்றும் பரிசு பொருட்கள்கொண்டு செல்ல வாய்ப்பு இருக்கும் என்ற தகவலால் இந்த சோதனை நடந்தது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 24 மணி நேரமும் வாகன சோதனை தீவிரமாக நடந்து வருகிறது.
முக்கிய சோதனை சாவடிகளில் துணை ராணுவத்தினர் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி டானா புதூர் சோதனை சாவடியில் இன்று அதிகாலை 2.40 மணயளவில் பவானிசாகர் தொகுதி பறக்கும் படை அதிகாரி மாரிமுத்து தலைமையிலான குழுவினர் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
அப்போது கேரளாவில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது காரில் ரூ. 2 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது. காரில் வந்தவர்களிடம் கேட்ட போது தாங்கள் மாடு வியாபாரிகள் என்றும் மாடு வாங்க அந்தியூர் சென்றதாகவும் தெரிவித்தனர்.
ஆனால் பணத்துக்கு உரிய ஆவணங்கள் அவர்கள் தரவில்லை. இதையடுத்து பறக்கும் படையினர் ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
இதே போல் அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் சோதனை சாவடியில் பர்கூர் மலை பகுதிக்கு செல்லும் வாகனங்களையும், பர்கூரில் இருந்து அந்தியூர் வந்த வாகனங்களையும் நிறுத்தி விடிய,விடிய சோதனை நடத்தினர். வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் மற்றும் பரிசு பொருட்கள்கொண்டு செல்ல வாய்ப்பு இருக்கும் என்ற தகவலால் இந்த சோதனை நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X