search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பணிக்கு வராத 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

    சட்டமன்ற தேர்தலையொட்டி தொகுதி வாரியாக அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், போலீசார் கொண்ட தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறார்கள்.
    கோபிசெட்டிபாளையம்:

    சட்டமன்ற தேர்தலையொட்டி தொகுதி வாரியாக அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், போலீசார் கொண்ட தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறார்கள்.

    பறக்கும் படையினர் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் ஏதாவது கொண்டு செல்லப்படுகிறதா? என்று தீவிர வாகன சோதனை நடத்தி கண்காணித்து வருகிறார்கள்.

    கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட பறக்கும் படையில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேஷ், நம்பியூர் போலீஸ் நிலையத்தில் வேலைப்பார்த்த ஏட்டு தினேஷ் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இவர்கள் 2 பேரும் சரியாக தேர்தல் பணிக்கு வரவில்லை என்று பறக்கும் படை அதிகாரி அன்பழகன் என்பவர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கதிரவனுக்கு தகவல் தெரிவித்தார்.

    இது குறித்து விசாரணை நடத்திய கலெக்டர், தேர்தல் பணிக்கு சரியாக வராத சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேஷ், ஏட்டு தினேஷ்குமார் ஆகிய 2 பேரையும் ஈரோடு ஆயுதபடைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.
    Next Story
    ×