என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு வாக்கு சேகரித்தபோது எடுத்தபடம்.
    X
    அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு வாக்கு சேகரித்தபோது எடுத்தபடம்.

    பெரிய அல்லாபுரத்தில் கால்வாய் தூர்வாரி கரை அகலப்படுத்தப்படும் - அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு வாக்குறுதி

    பெரிய அல்லாபுரத்தில் உள்ள கால்வாய் தூர்வாரி கரை அகலப்படுத்தப்படும் என அ.தி.மு.க. வேட்பாளர் எஸ் .ஆர்.கே.அப்பு தெரிவித்தார்.
    வேலூர்:

    வேலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.கே. அப்பு திறந்த ஜீப்பிலும், நடந்து சென்றும் வீதி வீதியாக பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து வருகிறார். இவர் நேற்று 51- வது வார்டுக்கு உட்பட்ட பெரிய அல்லாபுரம் பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தப் பகுதியில் உள்ள கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு பட்டா கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றனர். தொரப்பாடியில் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என்றனர்.

    நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்த பகுதியில் உள்ள கானார் தூர்வாரி கரைகள் அகலப்படுத்தப்படும். மேலும் பட்டா இல்லாமல் வசிக்கும் மக்களுக்கு பட்டா கிடைக்க வழிவகை செய்வேன். தொரப்பாடியில் உள்ள தகனமேடை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். நான் சட்டமன்ற உறுப்பினராக ஆனவுடன் முதல் பணியே வேலூரில் உள்ள சாலைகளை சீரமைப்பதுதான்.

    மேலும் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்வேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தின்போது வேலூர் தொகுதி பொறுப்பாளர் எம்.மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் சுகன்யா தாஸ், பகுதி செயலாளர் ஏ.ஜி.பாண்டியன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் அருண்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் ஆர். சுரேஷ், ஜெயலலிதா பேரவை பகுதி செயலாளர் அசோக்குமார், வட்ட செயலாளர் பாபு, புதிய நீதி கட்சி நகர செயலாளர் முரளி மற்றும் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×