என் மலர்
செய்திகள்

வாலாஜா ஒன்றியத்தில் அ.தி.மு.க .வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் வாக்கு சேகரித்தபோது எடுத்த படம்.
நவ்லாக் ஊராட்சியை பேரூராட்சியாக உயர்த்துவேன் - அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் வாக்குறுதி
நவ்லாக் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்துவேன் என்று அ.தி.மு.க. வேட்பாளர் எஸ். எம்.சுகுமார் வாக்குறுதியளித்தார்.
சிப்காட் (ராணிப்பேட்டை):
ராணிப்பேட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ். எம்.சுகுமார் நேற்று மாந்தாங்கல், வள்ளலார் நகர், தண்டலம், பழைய செட்டித்தாங்கல், செட்டித்தாங்கல், வ.உ.சி.நகர், எருக்கந்தொட்டி, வில்வநாதபுரம், கல்மேல்குப்பம், வாணாபாடி, மாணிக்க நகர், ஏரிக்கோடி, எடப்பாளையம், தமிழன்னை வீதி, பாரதி நகர், புளியங்கண்ணு, அவரக்கரை, தெங்கால் உள்ளிட்ட வாலாஜா ஒன்றியப் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் நவ்லாக் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்தவும், பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா கிடைக்கவும் பாடுபடுவேன். மாந்தாங்கல்-வள்ளலார் நகர் சாலையை அகலப்படுத்தி பஸ் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து பேசினார்.
அப்போது பல இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்தும், பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பளித்தனர்.
வேட்பாளருடன் அ.தி.மு.க. தொகுதி பொறுப்பாளர் சுமைதாங்கி ஏழுமலை, வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.கே.ராதாகிருஷ்ணன், அவைத்தலைவர் பாபு, ஒன்றிய பொருளாளர் பழனி, துணை செயலாளர் ஜெயந்தி நித்யானந்தம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பூங்காவனம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தகரகுப்பம் முனிசாமி, பா.ம.க. ஒன்றிய செயலாளர்கள் சபரி கிரீசன், பாரத், தொகுதி பொறுப்பாளர் வக்கீல் ஜானகிராமன், புதா மணி, உள்ளிட்ட பா.ம.க. நிர்வாகிகளும், வாணாபாடி தயாளன், வாலாஜா விக்கிரமன், த.மா.கா. நிர்வாகிகளும், பாஸ்கர், செங்காடு கஜேந்திரன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகளும் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர்.
இந்திய கட்டிட தொழிலாளர் பேரவையின் மாநில தலைவரும், புரட்சிகர தொழிலாளர் கட்சியின் மாநில பொருளாளருமான நேதாஜி நடேச கவுண்டர், நேற்று அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.எம்.சுகுமாரை நேரில் சந்தித்து, தங்கள் அமைப்பின் ஆதரவை அவருக்கு தெரிவித்து, தங்கள் அமைப்பினருடன் ராணிப்பேட்டை தொகுதியில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார்.
Next Story






