search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வந்தவாசியில் 250 மதுபாட்டில்கள் பறிமுதல் - டாஸ்மாக் ஊழியர்கள் மீது வழக்கு

    வந்தவாசியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது 250 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
    வந்தவாசி:

    வந்தவாசியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வந்தவாசி சத்யா நகரில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தபோது 250 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், வந்தவாசி திண்டிவனம் சாலை காளி கோவில் தெருவை சேர்ந்த உசைன் (வயது 27) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது டாஸ்மாக்கில் பணிபுரியும் எம்.ஆனந்தன், பி.முருகன், எம்.ராமலிங்கம் ஆகியோரிடம் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்ததாக உசைன் கூறினார்.

    இதையடுத்துடாஸ்மாக் ஊழியர்கள் மீது வந்தவாசி தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×