என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    ஓசூரில் லாரி மீது கார் மோதிய விபத்தில் இளம்பெண் பலி

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று அதிகாலை லாரி மீது கார் மோதிய விபத்தில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஓசூர்:

    திருப்பூரை சேர்ந்தவர் ரகு. இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று இரவு பெங்களூரு நோக்கி காரில் சென்றார். காரை அவரே ஓட்டிச்சென்றார்.

    இந்தநிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரண்டபள்ளி காட்டுப்பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் கார் சென்றபோது, முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியின் பின்புறம் வேகமாக மோதியது.

    இதில், காரின் முன்புறம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில், காரின் முன்பக்கம் அமர்ந்திருந்த ரகுவின் மகள் சுபிட்ஷா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    மேலும் ரகு மற்றும் அவரது மனைவி, மகன் ஆகிய 3 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×