search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சட்டமன்ற தேர்தலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 பேர் கைது

    வேலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் சுதந்திரமாகவும், அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் சுதந்திரமாகவும், அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து குற்றசம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள், ரவுடிகள் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுகின்றனர். அதன்படி நேற்று வேலூர் சின்னஅல்லாபுரத்தை சேர்ந்த சிவாவை (வயது 23) பாகாயம் போலீசாரும், வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் சத்துவாச்சாரி விஜயராகவபுரத்தைச் சேர்ந்த பொன்முடி (50), ஓல்டுடவுனை சேர்ந்த ராமச்சந்திரன் (37) ஆகியோரையும், அரியூர் போலீசார் அணைக்கட்டு தாலுகா புலிமேட்டை சேர்ந்த பிரகாசையும் (27) கைது செய்தனர்.
    Next Story
    ×