என் மலர்
செய்திகள்

வாகன சோதனை
தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரையில் காரில் கொண்டு சென்ற ரூ.1.70 லட்சம் பறிமுதல்
ஊத்தங்கரை அருகே கதவணி பஸ் நிறுத்தம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே தக்கட்டி சோதனைச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மைசூரில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் ரூ.95 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த மகாதேவா என்பவர் உரிய ஆவணம் இல்லாமல் பணம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் ரூ.95 ஆயிரத்தை பறிமுதல் செய்து தேன்கனிக்கோட்டை தேர்தல் அதிகாரி ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனர். ஊத்தங்கரை அருகே கதவணி பஸ் நிறுத்தம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது ரூ.75 ஆயிரம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.75 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
Next Story






