என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    விக்கிரமங்கலம் அருகே மது விற்ற பெண் கைது

    விக்கிரமங்கலம் அருகே மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விக்கிரமங்கலம்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் மற்றும் போலீசார் ஸ்ரீபுரந்தான் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி ஸ்ரீபுரந்தான் மெயின்ரோட்டை சேர்ந்த கமலா(வயது 45) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். இதில் அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனா். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கமலாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×