என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    திருபுவனை அருகே தனியார் கம்பெனி காவலாளி மர்ம மரணம்

    திருபுவனை அருகே தனியார் கம்பெனி காவலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருபுவனை:

    திருபுவனை அருகே செல்லிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 55). இவர் திருபுவனையில் உள்ள மாத்திரை தயாரிக்கும் தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலைசெய்து வந்தார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒருமகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று கொத்தபுரிநத்தம் செல்லும் சாலையில் உள்ள அய்யனார் கோவில் அருகே மர்மமான முறையில் குணசேகரன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று குணசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    குணசேகரன் மர்ம சாவு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×