search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பட்டறைக்குள் புகுந்து எந்திரங்கள் திருடிய பெண் உள்பட 2 பேர் கைது

    பெருந்துறை அருகே பட்டறைக்குள் புகுந்து எந்திரங்கள் திருடிய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள பிச்சாண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் அந்த பகுதியில் லேத் பட்டறை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் அவருடைய லேத் பட்டறைக்கு நேற்று முன்தினம் மதியம் ஆண் மற்றும் பெண் என 2 பேர் வந்து உள்ளனர். அப்போது யாரும் இல்லாத நேரம் பார்த்து அந்த 2 பேரும் திடீெரன பட்டறைக்குள் புகுந்து 2 எந்திரங்களை தூக்கிக்கொண்டு மோட்டார்சைக்கிளில் ஏறி சென்றனர். அப்போது அங்கு பட்டறையில் வேலைக்கு பார்க்கும் தொழிலாளி ஒருவர் தற்செயலாக வந்து உள்ளார். பட்டறைக்குள் புகுந்து எந்திரங்களை 2 பேர் தூக்கி கொண்டு சென்றதை கண்டதும் திருடன், திருடன், என சத்தம் போட்டு கத்தினார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து சென்று அந்த 2 பேரையும் பிடித்து பெருந்துறை போலீசில் ஒப்படைத்தனர்.

    பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர்கள் ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த ஆனந்த் (வயது 43), நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி பரமேஸ்வரி (35) என்பதும், அவர்கள் 2 பேரும் மகேந்திரனின் லேத் பட்டறையில் வேலை பார்த்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து நின்றுவிட்டதும், நேற்று முன்தினம் பட்டறைக்கு வந்த அவர்கள் அங்கிருந்த 2 எந்திரங்களை திருடியதும்,’ தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து ஆனந்த் மற்றும் பரமேஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×