என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வரையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வரையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. மாவட்ட நிர்வாகத்தின் தீவிர நடவடிக்கையாலும், பொதுமக்கள் முக கவசம் அணிந்து சென்றதாலும், சமூக இடைவெளியை கடைபிடித்ததின் விளைவாகவும் கொரோனா பரவல் தொற்று குறைந்தது. இதனால் தினமும் ஒன்று முதல் 5 பேர் வரையில் கொரோனா பாதிப்பு காணப்பட்டது. மேலும் இறப்பும் வெகுவாக குறைந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிேசாதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவி வருவதால் பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்டம் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர் பாக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மார்ச் 21-ந் தேதி மட்டும் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 289 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8 ஆயிரத்து 94 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 77 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வரையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. மாவட்ட நிர்வாகத்தின் தீவிர நடவடிக்கையாலும், பொதுமக்கள் முக கவசம் அணிந்து சென்றதாலும், சமூக இடைவெளியை கடைபிடித்ததின் விளைவாகவும் கொரோனா பரவல் தொற்று குறைந்தது. இதனால் தினமும் ஒன்று முதல் 5 பேர் வரையில் கொரோனா பாதிப்பு காணப்பட்டது. மேலும் இறப்பும் வெகுவாக குறைந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிேசாதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவி வருவதால் பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்டம் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர் பாக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மார்ச் 21-ந் தேதி மட்டும் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 289 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8 ஆயிரத்து 94 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 77 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






