என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலூர் மாவட்டத்தில் 83 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு - 33 மனுக்கள் தள்ளுபடி

    வேலூர் தொகுதியில் 24 மனுக்கள் பெறப்பட்டிருந்தன. அவற்றில் 20 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. 4 பேரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
    வேலூர்:

    தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 12-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.

    வேட்பாளர்கள் அந்தந்த தொகுதிகளில் மனுக்கள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் 21 பெண் வேட்பாளர்கள், 95 ஆண் வேட்பாளர்கள் என்று மொத்தம் 116 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

    அதிகபட்சமாக குடியாத்தம் (தனி) தொகுதியில் 28 பேர் வேட்புமனு அளித்திருந்தனர். கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் குறைந்தபட்சமாக 19 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

    ஒவ்வொரு தொகுதிகளிலும் பெறப்பட்ட மனுக்களை வேட்பாளர்கள் முன்னிலையில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நேற்று முன்தினம் பரிசீலனை செய்தனர்.

    வேலூர் தொகுதியில் 24 மனுக்கள் பெறப்பட்டிருந்தன. அவற்றில் 20 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. 4 பேரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    காட்பாடி தொகுதியில் பெறப்பட்ட 22 மனுக்களில், 17 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டு, 5 மனுக்கள் தள்ளுபடியானது.

    அணைக்கட்டு தொகுதியில் 23 மனுக்களில் 15 மனுக்கள் ஏற்கப்பட்டன. 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

    கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் 19 பேர் வேட்புமனு அளித்திருந்தனர். அவற்றில் 10 மனுக்கள் ஏற்கப்பட்டன. 9 மனுக்கள் தள்ளுபடியானது.

    குடியாத்தம் (தனி) தொகுதியில் பெறப்பட்ட 28 மனுக்களில் 7 மனுக்கள் தள்ளுபடியானது. 21 மனுக்கள் ஏற்கப்பட்டன. ஆக மொத்தம் 116 வேட்புமனுக்களில், 83 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. 33 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    வேட்புமனுக்கள் வாபஸ் பெறுவதற்கு இன்றைய தினமே (திங்கட்கிழமை) கடைசிநாளாகும்.

    அதைத்தொடர்ந்து தொகுதி வாரியாக இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னங்களுடன் வெளியிடப்படும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×