என் மலர்
செய்திகள்

வாகன சோதனை
ஜவளகிரி சோதனைச்சாவடி அருகே காரில் எடுத்துச்சென்ற ரூ.90 ஆயிரம் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜவளகிரி சோதனைச்சாவடி அருகே காரில் எடுத்துச்சென்ற ரூ.90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜவளகிரி சோதனைச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக பெங்களூருவைச் சேர்ந்த கணேஷ் ரவிசங்கர் என்பவர் வந்துள்ளார். அவரது காரில் ரூ.90 ஆயிரம் இருந்துள்ளது. அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் முழுவதையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து தேன்கனிக்கோட்டை தாசில்தார் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று தேர்தல் நடத்தும் அதிகாரி ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனர்.
அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தண்டபாணி உடனிருந்தார்.
Next Story






