என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
வடலூர் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
வடலூர் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடலூர்:
வடலூர் அருகே உள்ள பாச்சாரப்பாளையம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவருடைய மகள் சங்கரி(வயது 16). இவர் குறிஞ்சிப்பாடியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சங்கரி நேற்று வீட்டில் வேலை செய்யாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவரை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சங்கிரி, வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதைபார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சங்கரியை மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சங்கரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






