என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 2 லட்சத்து 16 ஆயிரம் பறிமுதல்
Byமாலை மலர்14 March 2021 7:48 AM GMT (Updated: 14 March 2021 7:48 AM GMT)
கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட பெரிய கொரவம்பாளையம் என்ற பகுதியில் இன்று காலை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர்.
கோபி:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். அவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட பெரிய கொரவம்பாளையம் என்ற பகுதியில் இன்று காலை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கோபி புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரை மடக்கி சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் ரூ. 2 லட்சத்து 16 ஆயிரத்து 600 ரொக்கப்பணம் இருந்தது.
மேலும் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை. இது குறித்து சண்முகசுந்தரத்திடம் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தான் மசாலா நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதி என்றும் வசூலான பணத்தை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.
ஆனால் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவியிடம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். அவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட பெரிய கொரவம்பாளையம் என்ற பகுதியில் இன்று காலை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கோபி புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரை மடக்கி சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் ரூ. 2 லட்சத்து 16 ஆயிரத்து 600 ரொக்கப்பணம் இருந்தது.
மேலும் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை. இது குறித்து சண்முகசுந்தரத்திடம் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தான் மசாலா நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதி என்றும் வசூலான பணத்தை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.
ஆனால் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவியிடம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X