search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ரோட்டில் நடந்து சென்றபோது வாகனம் மோதி பேரூராட்சி பணியாளர் பலி

    ஊஞ்சலூர் அருகே ரோட்டில் நடந்து சென்றபோது வாகனம் மோதி பேரூராட்சி பணியாளர் பலியானார்.
    ஊஞ்சலூர்:

    ஊஞ்சலூர் அருகே உள்ள தாமரைப்பாளையத்தை சேர்ந்தவர் ரவி (வயது 51). இவர் வெள்ளோட்டாம்பரப்பு பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி புவனேஸ்வரி (45). இவர்களுடைய மகன் மணீஸ்வேல். அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் மணீஸ்வேல் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    ரவி நேற்று முன்தினம் இரவு ஒத்தக்கடையில் இருந்து வீட்டுக்கு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    தாமரைப்பாளையம் ரேஷன் கடை அருகே சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.

    உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ரவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு சென்ற வாகனத்தை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×