என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
கிருஷ்ணகிரி அருகே கடன் தொல்லையால் பெண் தற்கொலை
கிருஷ்ணகிரி அருகே கடன் தொல்லையால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே உள்ள வெங்கடாபுரம் ஊராட்சி கே.ஏ.தர்கா பகுதியை சேர்ந்தவர் முதாஸீர். இவரது மனைவி சபனா (வயது 29). கூலித்தொழிலாளி. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் போதுமான வருமானம் இல்லாததால், குடும்பம் நடத்த சபனா பலரிடம் பணம் கடனாக வாங்கினார். கடனை திருப்பி கொடுக்க முடியாததால் மனமுடைந்த சபனா, கடந்த 5-ந் தேதி விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார்.
அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சபனா நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






