என் மலர்
செய்திகள்

வாகன சோதனை
அன்னவாசல் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனை
விராலிமலை தொகுதி முழுவதும் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அன்னவாசல்:
விராலிமலை சட்டமன்ற தொகுதியில் பறக்கும்படை அலுவலர் பூங்காவனம் தலைமையில் வல்லத்திராக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் உள்ளிட்ட போலீசார் அன்னவாசலில் இருந்து விராலிமலை செல்லும் சாலையில் காலாடிப்பட்டி சத்திரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக வந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ, கார், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி வாக்காளர்களுக்கு கொடுக்க பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்று சோதனை மேற்கொண்டனர். இதேபோன்று விராலிமலை தொகுதி முழுவதும் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story






